கல்தோட்ட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

DEATH

பலாங்கொடை – கல்தோட்ட பொலிஸ் பிரிவின் பின்னகெட்டிய பகுதியில் உள்ள வளவை ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரண்டு பேர் மீது கும்புக் மரத்தின் கிளை முறிந்து விழுந்து காயமடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்  பலாங்கொடை – கல்தோட்ட பகுதியைச்  சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக  தெரிவித்துள்ளனர்.

2 thoughts on “கல்தோட்ட பகுதியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *