ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த காரொன்று, இன்று (23) அதிகாலை இரண்டாவது மைல் கல் பகுதியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனை மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் காரின் சாரதி மற்றும் அதில் பயணித்த 15 வயது சிறுமி உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு சின்ன ஊறணி கருவப்பங்கேணி செலியன் வீதி, இரண்டாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய், கருவப்பங்கேணி மற்றும் நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில், உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக சம்பவதினமான இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது கார் வேககட்டுப்பாட்டை மீறி பனை மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரியவருகிறது.
சாரதியும் 15 சிறுமியும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த சிறுமியின் தாயாரான பாலச்சந்திரன் மோகனகாந்தி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2025 AICPA மற்றும் CIMA – JXG Pinnacle விருது வழங்கும் நிகழ்வில் MAS Holdings மூன்று மதிப்புமிக்க தங்க…
දේශය පෝෂණය කරමින්, මිහිතලය පොහොසත් කරමු තිරසර පරිසරයක් නිර්මාණය කරන්නට දිගු කාලයක් පුරා ලබා…
வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சந்தை மாற்றத்தின் இருபது ஆண்டுகள் கூட்டாண்மையை கொண்டாடுகிறது கொழும்பு, ஜூன் 20, 2025 – AMARON…
The Heladiv Tea Club (HTC), nestled in the iconic Dutch Hospital precinct in the heart…
இலங்கையில் Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக செயற்படும் Delmege Energy, இரு பிரபலமான வர்த்தகநாம தூதுவர்கள நியமித்து,…
Link Natural Products (Pvt) Ltd., the foremost manufacturer of herbal healthcare and personal care products…