நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
காற்றின் தரக்குறியீட்டில் மாற்றம்.
கடந்த சில நாட்களாக நிலவிய காற்றின் தரக்குறியீட்டில் ஏற்பட்ட எச்சரிக்கை மாற்றம் தற்பொழுது நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய நகரங்களில் சற்று மோசமாக காற்றின் தரம் நிலவுவதனால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், உணர்திறன் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


