காலி மாநகர சபையில் குழப்பநிலை!

காலி மாநகர சபையில் இன்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற விசேட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

காலி மாநகர சபையின் மேயர் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கூட்டத்தை  ஆரம்பிக்க முயன்ற போது அங்கிருந்த காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர்  “ எங்களது வாக்குகளை கொள்ளையிட்ட கொள்ளையர்கள் ” என சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர். 

ஆனாலும் காலி மாநகர சபையின் மேயர் விசேட கூட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் அவர் உரையாற்றும் போது காலி மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் அவர் மீது தண்ணீரை தெளித்துள்ளனர்.

இதனையடுத்து காலி மாநகர சபையின் மேயர் அங்கிருந்து வெளியே சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

4 thoughts on “காலி மாநகர சபையில் குழப்பநிலை!

  1. 3831bet.info eh? I was skeptical at first, but honestly, it’s grown on me. They have a good variety of games and the customer service is pretty responsive. Throwing it out there! 3831bet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *