காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள பிரபல சூப்பர் மார்கட் வர்த்தக கட்டிடத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்பட்ட பாரிய தீயினை தீயணைப்புப் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த போதிலும் குறித்த வியாபார நிறுவனம் முற்றிலும் சேதமடைந்துடதுடன் பல இலட்சக்கணக்கான ரூபா பெறுமதியான பொருட்களும்,உடைமைகளும் சேதமடைந்துள்ளன..
கியூபாவில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுகள்.. உதவும் சீனா, ரஷ்யா..

கியூபாவில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, சீன அரசின் உதவியோடு சூரியசக்தி மின்சார பூங்காகளை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன.
அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால், பல ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் இருக்கும் மின் நிலையங்கள் பழுதடைவதால் அடிக்கடி நாடு தழுவிய அளவில் மின்வெட்டுகள் ஏற்படுகின்றன.
இந்தாண்டுக்குள், ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட சூரியசக்தி மின்சார பூங்காகளை அங்கு அமைத்து தர சீனா முன்வந்துள்ளது.