கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது

ஜனவரி 1 அன்று கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த 22 பேர், பிரான்ஸ் (8), இத்தாலி (6) உட்படப் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து முதன்முறையாகப் பேசிய ‘Le Constellation’ பாரின் உரிமையாளர்கள், இது ஒரு பயங்கரமான துயரம் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தங்களின் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளனர்.

2020 முதல் 2025 வரை அந்த பாரில் முறையான பாதுகாப்பு ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பதை நகர நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்கும் அஞ்சலி கூட்டம் நடைபெறவுள்ளது.

One thought on “கிரான்ஸ்-மொன்டானாவில் நிகழ்ந்த தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *