கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; போதிய தீயணைப்பு வசதிகள் இன்மை என குற்றசாட்டு

கிரான்ஸ்-மொன்டானாவில் சுமார் 40 பேரை பலிகொண்ட தீ விபத்து  2003-ல் அமெரிக்காவின் ‘தி ஸ்டேஷன்’ கிளப்பில் நடந்த துயரத்தை நினைவுபடுத்துகிறது என தெரிவிக்கப்படுள்ளது .

ஷாம்பெயின் பாட்டிலில் இருந்த பட்டாசுப் பொறிகள், மேற்கூரையில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ஒலித்தடுப்பு அட்டைகள் மீது பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க விபத்திலும் இதேபோல் பட்டாசுப் பொறிகளால் நுரை பஞ்சுகள் (polyurethane foam) தீப்பற்றி 100 பேர் உயிரிழந்தனர்

இத்தகைய விபத்துகளில் இருந்து பாடம் கற்கத் தவறியதே தற்போதைய பேரழிவுக்குக் காரணம் என நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

போதிய தீயணைப்பு வசதிகள் இல்லாததும், மக்கள் வெளியேறத் தகுந்த வழிகள் இல்லாததும் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

2 thoughts on “கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; போதிய தீயணைப்பு வசதிகள் இன்மை என குற்றசாட்டு

  1. Yo, tai188bet looks promising. They’ve got a solid selection of games and the site’s not clunky like others I’ve tried. Worth a look if you’re into online betting. Check out tai188bet and let me know what you think!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *