கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; தீவிரமாக விசாரணை

கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து தொடர்பாகக் காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர்கள் தானாக முன்வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

 அனுமதி விதிகள், தீயணைப்பு பாதுகாப்பு மற்றும் அவசரகால வெளியேறும் வழிகள் முறையாக இருந்தனவா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கறிஞர் கிறிஸ்டியன் லென்ஸ் கூறுகையில், “பாதுகாப்பு கடமைகளைத் தவறியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம்.

பாரின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களிடம் விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக் கொள்ளவும், இழப்பீடு மற்றும் சட்ட உதவிகளைப் பெறவும் உரிமை உண்டு.

விபத்து நடந்த இடத்தில் பட்டாசு பயன்பாட்டிற்கான கட்டுப்பாடுகள் மீறப்பட்டதா என்பது இந்த விசாரணையின் முக்கிய அம்சமாக இருக்கும்

2 thoughts on “கிரான்ஸ்-மொன்டானா தீ விபத்து ; தீவிரமாக விசாரணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *