கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் காணமல் போனோரை இனம் காண முடியாத நிலை ; உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதாக தெரிவிப்பு

கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 16 முதல் 26 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தெரிவிக்கப்படுள்ளது .

உயிரிழந்தவர்களின் உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதால், அவர்களை அடையாளம் காண்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்குச் சில நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இதனால் உறவினர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் உடன்பிறப்புகள் மற்றும் நண்பர்களின் புகைப்படங்களைப் பகிர்ந்து, அவர்கள் குறித்த தகவல்களைத் தேடி வருகின்றனர்.

2 thoughts on “கிரான்ஸ்-மொன்டானா பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் காணமல் போனோரை இனம் காண முடியாத நிலை ; உடல்கள் கடுமையாகச் சிதைந்துள்ளதாக தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *