“குடு ரொஷான்” துப்பாக்கியுடன் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமாக “குடு ரொஷான்” என்பவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது “குடு ரொஷான்” என்பவரிடமிருந்து மில்லிமீற்றர் 9 ரக துப்பாக்கி ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

3 thoughts on ““குடு ரொஷான்” துப்பாக்கியுடன் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *