நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கழிவுகளை வீசிய நபர் கைது!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் கழிவுகளை வீசிய நபரொருவரை நேற்று புதன்கிழமை (10) அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவை பொலிஸ் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வேன் சாரதி ஒருவர் 19வது கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் அதிவேக வீதியில் கழிவுப் பொருட்கள் அடங்கிய பையை வீசியதை அதிவேக வீதியில் சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டிருந்த அதிகாரிகள் அவதானித்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் உடனடியாக சீதுவை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, அதிவேக நெடுஞ்சாலை சட்டத்தின் கீழ் வீதியில் கழிவுகளை வீசிய குற்றச்சாட்டில் வேனின் சாரதி கைது சீதுவை பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினர்.


881betcom is a decent option if you’re looking for something new. They have a solid selection of games and the odds are pretty competitive. Give them a try! 881betcom
Okay, so 49slotgo. It’s alright. Not gonna change your life, but a decent distraction for a bit. Worth a shot when bored: 49slotgo