கோவிட் தொடர்பில் இரண்டு சுற்று நிருபங்கள்

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் பொதுமக்களுக்காக ஒரு சுற்று நிருபமும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மற்றுமொரு சுற்று நிருபமும் தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு சுற்று நிருபங்களை வெளியிடுவது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிய பிராந்திய வலய நாடுகளில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று பரவுகையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் புதிய உப திரிபு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடிய கர்பிணிகள், வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகள் முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமெனவும், மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *