அந்தணர்களின் உயர்வுக்காக பெரிதும் பாடுபட்டவர், குருகுல கல்விமுறை தொடக்கம் பல்வேறு வகையான கல்வி இலக்குகளை அடுத்த சமுதாயத்திற்கு எடுத்து சென்ற சிவாகம கலாநிதி இணுவில் தர்ம சாஸ்தா பெருந்தகை இன்று சிவபதமடைந்தார்.
பாரதத்தின் மைந்தனாக, பல்மொழி ஆளுமை மிக்கவராக, அன்புடன் அனைவரையும் அரவணைக்கும் பண்பாளராக திகழ்ந்தவர். யார் எந்த உதவி கேட்டாலும் உடனே தயங்காமல் அதற்கு வழிவகுப்பார்.
ஒரு ஆசான் எப்படி வாழ வேண்டும் என முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்டியவர்.
இந்தியாவில் உள்ள ஆதீனங்கள், குருகுல அதிபர்கள் உள்ளிட்ட பெரியோரது அன்புக்கும் மரியாதைக்கும் போற்றுதலுக்கும் உரியவராக திகழ்ந்தவர் இணுவில் தர்ம சாஸ்தா பெருந்தகைக்கு அண்மையில் தருமை ஆதீனம் “சிவாகம கலாநிதி” எனும் கெரவப்பட்டத்தை வழங்கியது. இக்கௌரவத்தினை இந்திய துணை தூதுவர் குருக்கள் அவர்களின் இல்லம் தேடி சென்று வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இந்துக் குருமார் அமைப்பு சார்பில் அன்னாரின் ஆத்மசாந்தியடைய பிராத்திப்பதாக இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் சிவாகமகலாநிதி. சிவஸ்ரீ. கு.வை. க. வைத்தீஸ்வர குருக்களும், அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்களும் முன்னின்று அறிக்கையொன்றை தெரிவித்ததுடன், தங்கள் தலா துயரையும் பகிர்ந்திருக்கின்றார்கள்..
வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு…
வடக்கு மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்களை தங்கள் வளாகத்திற்குத் திருப்பி அனுப்பிய பேருந்து ஒரு மினிவேன் மீது மோதியதில் 15 பேர்…
காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற 12 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற ஒரு படகு இஸ்ரேலியப் படைகளால் கைப்பற்றப்பட்ட…
2025 பொசோன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக…
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருந்த அக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் அக்சியம்-4 மனித விண்வெளிப்…
கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார்…