நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுனாமி அலையினால் சேதமடைந்த ரயிலின் இயந்திரம் இயங்கவில்லை
காலி, பெரலிய பகுதியில் சுனாமி அலையினால் சேதமடைந்த ரயிலின் இயந்திரம் இயங்கவில்லை.
எனினும், பேரழிவை நினைவுகூரும் வகையில், ‘சுனாமி ரயில்’ என அழைக்கப்படும் ரயிலை இன்று வெள்ளிக்கிழமை (26) வேறு ஒரு இயந்திரத்தைப் பயன்படுத்தி மாத்தறைக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சேதமடைந்த இயந்திரம் பல ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருவதாகவும், தொழில்நுட்பக் கோளாறினால் இம் முறை இயக்கப்படவில்லை. இயந்திரத்தின் அச்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய தினம் காலை இயக்கப்படவில்லை என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.


Hey, checked out wimi.com jogo on Winmiibet! Good selection of games, pretty smooth experience overall. Need to try it again soon! Check it out here: wimi.com jogo
Just a heads up, guys, I played on taya3659 and the mobile experience was surprisingly smooth. Perfect for betting on the go. Worth it for that alone! Try it here: taya3659