சுனாமி பேபி , பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் அமைந்துள்ள சுனாமி பேபி அபிலாஷின் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபியின் முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக அபிலாஷின் பெற்றோர் அஞ்சலியை இன்று வெள்ளிக்கிழமை (26) செலுத்தினர்.

தற்போது 21 வயதுடை சுனாமி பேபி 81 என அறியப்படும் ஜெயராசா அபிலாஷ் தனது உயர் படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது இல்லத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத் தூபியில் அவரது பெற்றோர் இன்று சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

3 thoughts on “சுனாமி பேபி , பெற்றோர் அஞ்சலி செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *