செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார் இதனை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்படி முன்னதாக ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாசென்கோ நடத்திய ஏழு மணி நேரத்திற்கும் மேலான முன்னைய சாதனையை 2019 ஒக்டோபரில், உக்ரைனின் தேசிய பதிவு நிறுவனம், ஜெலென்ஸ்கி 14 மணி நேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி முறியடித்திருந்தார். ஆனால் தற்பொழுது 14 மணி நேரம் 54 நிமிடங்கள் பிரார்த்தனைக்காக சுருக்கமான இடைநிறுத்தங்களுடன் மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு நடத்திய செய்தியாளர் சந்திப்பே புதிய சாதனையாக பதிவாகியுள்ளதாக அவரது அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியாளர் சந்திப்பு, நள்ளிரவையும் தாண்டியும் நீடித்துள்ளது.

இதன்போது ஜனாதிபதி முய்சு தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தவண்ணம் இருந்தார் என அவரின் அலுவலகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *