ஜிசாடா நிறுவனத் தலைவர் மீது ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு

பெட்போல் (Fedpol) தகவலின்படி, சுவிஸ் வாசனை திரவிய பிராண்டான ஜிசாடா (Gisada) நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆர்பன் அடெமி, கடந்த காலங்களில் தீவிர இஸ்லாமிய “ரீட்!” (Read!) குர்ஆன் விநியோக இயக்கத்தையும், ஐ.எஸ். ஆதரவாளர்களையும் நிதியுதவி செய்ததாக சந்தேகம் எழுந்துள்ளது.

புகைப்படங்கள், உரையாடல் பதிவுகள் மற்றும் வாகனப் பயண தகவல்கள் மூலம் தீவிரவாத வட்டாரங்களுடன் தொடர்புகள் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஆர்பன் அடெமி அனைத்து குற்றச்சாட்டுகளையும் முற்றாக மறுத்துள்ளார். ஜிசாடாவின் ஆதரவாளரான எப்.சி. பாசல் கால்பந்து கிளப், குற்றச்சாட்டுகள் உறுதியாகினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.

One thought on “ஜிசாடா நிறுவனத் தலைவர் மீது ஐஎஸ் ஆதரவாளர்களுக்கு உதவியதாக குற்றச்சாட்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *