உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
ஜெர்மனியில் இடம்பெற்ற விபத்தினால் மக்கள் அச்சம்.

இன்று (மார்ச் 03) மேற்கு ஜெர்மனியில் மன்ஹெய்ம் நகரில் பாதசாரிகள் மீது நபர் ஒருவர் காரால் மோதியதில் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அப்பகுதியில் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ள நிலையில் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு உட்பிரவேசிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும், போக்குவரத்துக்கு மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறும் அப்பகுதி மக்களுக்கு மன்ஹெய்ம் பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.