டித்வா தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில்  ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க அமைக்கவுள்ள விசேட செயற்குழுவின் தலைமைப் பொறுப்பு  எதிர்க்கட்சிக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க கோரிக்கை  விடுத்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) விசேட கூற்றொன்றை முன்வைத்து  குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்ட  டித்வா புயல் அனர்த்தம் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதா அல்லது நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதா என தேடிப் பார்த்து அறிக்கை  சமர்ப்பிக்க பாராளுமன்ற செயற்குழுவொன்றை அமைக்குமாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 20க்கும் அதிகமானவர்கள் கைச்சாத்திட்டு மகஜர் ஒன்று சபாநாயகராகிய உங்களிடம் கடந்த மாதம் 18ஆம் திகதி கையளித்திருந்தனர்..

அரசாங்கம் அந்த செயற்குழுவை உண்மையாக அமைப்பதாக இருந்தால், அந்த குழுவின் தலைமை பொறுப்பை  எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதற்கு முன்னரும் இவ்வாறான விசேட செயற்குழு அமைக்கப்பட்டபோது, எதிர்க்கட்சிக்கே அதன் தலைமை பதவி வழங்கப்பட்டது.

One thought on “டித்வா தொடர்பில் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *