Categories: WORLD

டிரம்ப் – எலான்கூட்டணி – சூடுபிடிக்கும் அரசியல் அரசியல்களமும்.

எப்போதும் வெளிப்படையாக தனது கருத்தினை முன்வைப்பவரும் , கொலை முயட்சியில் இருந்து தப்பியவருமான பிரபல எழுத்தாளர் சல்மான் ருஸ்டி, கருத்து மற்றும் எழுத்துச்சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நேரடியாக அமெரிக்காவின் கோடீஸ்வரர் எலான் மஸ்க்கை சாடி தெரிவித்துள்ளார்.

மஸ்க்கின் எக்ஸ் தளம் உண்மையாகவே கருத்து சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றதா? என்ற கேள்விக்கு, எலன் மஸ்க் கருத்து சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கு பதில் அதற்கு இடையூறு விளைவிக்கின்றார் என எழுத்தாளர் சல்மான் ருஸ்டி கருத்து வெளியிட்டுள்ளார்.

மஸ்க் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவில்லை எனவும், அவரது சமூக வலையமைப்பு தீவிரவலதுசாரிகளிற்கு ஆதரவான கருத்துருவாக்கத்தில் ஈடுபடுகின்றது எனவும் தெரிவித்துள்ள சல்மான் ருஸ்டி, எலான் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் உன்னதமான பணியில் ஈடுபடுவதாக தெரிவித்துக்கொண்டே அதற்கு எதிராக செயற்படுவது நேர்மையற்ற விடயம் எனவும், செவ்வாய்கிரகத்திற்கு செல்லும் முதல்மனிதனாக எலான் மஸ்க் விளங்கவேண்டும் என நான் விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் தனக்கும் உள்ள கருத்துவேறுபாடுட்டினை வெளிப்படுத்தும் விதத்தில் உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ‘தவறான தகவல் உலகத்தில் வாழ்கின்றார்” என தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியாக தன்னை யாராவது மாற்றவிரும்பினால் அது நடைபெறாது என குறிப்பிட்டுள்ளது, எலான் உடனான ட்ரம்பின் நட்பைகுறிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதே ஒரு நிலைப்பாட்டில்தான் அமெரிக்காவில் பெரும்பாலான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் மேட்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்நிலை தொடருமா இருந்தால் அமெரிக்க அரசியல் களத்தில் விரிசல்கள் ஏற்படலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கின்றார்கள்.

7 News Pulse

Recent Posts

ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்.

நோர்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹகராபிட்டிய ஜம்புதென்ன பகுதியில் உள்ள மூன்று வர்த்தக நிலையங்களில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று(மார்ச் 14)…

30 minutes ago

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் மொஹமட் சாலி நளீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நளீம் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் எதிர்வரும்…

38 minutes ago

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கு உபகரணம் பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள 6000 ரூபா வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை (மார்ச்…

45 minutes ago

பெண் வைத்தியர் விவகாரம் – சந்தேகநபருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில்…

57 minutes ago

வேலைநிறுத்தத்திற்கு தயாராகும் கிராம அலுவலர்கள்

கிராம சேவையாளர்கள் இன்று (மார்ச் 14) நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க முடிவு செய்துள்ளனர். பெண் கிராம சேவையாளர்களின்…

1 hour ago

திருகோணமலை மூதூரில் இரட்டைக்கொலை

மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று (மார்ச் 14) அதிகாலை சகோதரிகளான பெண்கள்…

1 hour ago