டெக்சாஸில் மெக்சிகன் கடற்படை விமான விபத்து: 5 பேர் உயிரிழப்பு

டெக்சாஸ் மாநிலத்தின் கால்வெஸ்டன் (Galveston) அருகே திங்கட்கிழமை (23) மெக்சிகன் கடற்படைக்குச் சொந்தமான சிறிய விமானம் விபத்துக்குள்ளானது. இளம் மருத்துவ நோயாளி ஒருவரை உட்பட மொத்தம் எட்டு பேரை ஏற்றிச் சென்ற இந்த விமான விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்துக்குப் பின்னர், டெக்சாஸ் கடற்கரையை ஒட்டிய நீர்ப்பரப்பில் தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மெக்சிகோ கடற்படை வெளியிட்ட அறிக்கையின் படி, விமானத்தில் நான்கு கடற்படை அதிகாரிகளும், ஒரு குழந்தை உட்பட நான்கு பொதுமக்களும் பயணித்திருந்தனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

விமானத்தில் பயணித்தவர்களில் இருவர் ‘மிச்சோ மற்றும் மாவ்’ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு தீவிர தீக்காயங்களுக்கு உள்ளான மெக்சிகன் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி வழங்கும் இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.

இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்ததை அமெரிக்க கடலோர காவல்படையின் பெட்டி அதிகாரி லூக் பேக்கர் உறுதிப்படுத்தியுள்ளார்.
விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

One thought on “டெக்சாஸில் மெக்சிகன் கடற்படை விமான விபத்து: 5 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *