திருகோணமலையில் கம்பீரமும், அழகு நிறைந்தவளாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வழங்கும் பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஏப்ரல் 1ம் திகதி கொடியேற்றம் நிகழ்ந்து இன்று 10ம் திருவிழாவான இரதோற்ஸவம் இடம்பெறுகின்றது.
.
அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தான பூஜை தம்பபூஜை இடம்பெற்று 6.15 மணிக்கு விசேட அலங்காரங்களுடன் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
காலை 8 மணிக்கு அடியார்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் மேள, தாள மங்கள இசையுடன் சிற்ப சாஸ்திர விதிகளுக்கு அமையப் பெற்ற அழகிய சித்திர தேரில் விநாயகரும் முருகனும் முன்னே வர அம்பாள் தனக்கென அமையப் பெற்ற அழகிய சித்திரத் தேரில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்துலருகின்றாள்.
.மேலும் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் இடம்பெற்று சரியாக 6 மணிக்கு அம்பாளுக்கு மகா ரிஷப வாகனத் திருவிழாவும் , பச்சைமேனி அருட்காட்சியும் இடம்பெறவுள்ளது,
நாளை 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
பங்குனி உத்திரம் ஆகிய நாளை அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தான பூஜை, தம்ப பூஜை, வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று அதிகாலை 5 மணிக்கு அம்பாள் புராதன பழமை வாய்ந்த சிம்ம வாகனத்தில் சமுத்திரக்கரைக்கு எழுந்தருளி சூரியோதயத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மூலஸ்தான பூஜையை தொடர்ந்து திருவூஞ்சல் இடம்பெறும். அதன்பின்னர் துவஜா அவரோகணம் என்று கூறப்படும் கொடியிறக்கம் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து அம்பாள் வெள்ளைத் திருமேனியாக திருப்பூந்தண்டிகையில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தருள்வாள்.
மற்றும் ஏப்ரல் 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழா விமர்சையாக இடம்பெறவுள்ளது. அம்பாள் பூங்காவன பந்தலில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அவ்வேளையில் அம்பாளின் அருள் பெற அடியார்களை ஆலய பரிபாலன சபை அழைக்கின்றார்கள்.
அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…
ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…
பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…
ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…