Categories: Local

திருகோணமலை அருள்மிகு பத்ரகாளி அம்பாள் ஆலய இரதோற்ஸவம்.

திருகோணமலையில் கம்பீரமும், அழகு நிறைந்தவளாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வழங்கும் பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஏப்ரல் 1ம் திகதி கொடியேற்றம் நிகழ்ந்து இன்று 10ம் திருவிழாவான இரதோற்ஸவம் இடம்பெறுகின்றது.
.
அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தான பூஜை தம்பபூஜை இடம்பெற்று 6.15 மணிக்கு விசேட அலங்காரங்களுடன் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

காலை 8 மணிக்கு அடியார்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் மேள, தாள மங்கள இசையுடன் சிற்ப சாஸ்திர விதிகளுக்கு அமையப் பெற்ற அழகிய சித்திர தேரில் விநாயகரும் முருகனும் முன்னே வர அம்பாள் தனக்கென அமையப் பெற்ற அழகிய சித்திரத் தேரில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்துலருகின்றாள்.

.மேலும் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் இடம்பெற்று சரியாக 6 மணிக்கு அம்பாளுக்கு மகா ரிஷப வாகனத் திருவிழாவும் , பச்சைமேனி அருட்காட்சியும் இடம்பெறவுள்ளது,

நாளை 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.

பங்குனி உத்திரம் ஆகிய நாளை அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தான பூஜை, தம்ப பூஜை, வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று அதிகாலை 5 மணிக்கு அம்பாள் புராதன பழமை வாய்ந்த சிம்ம வாகனத்தில் சமுத்திரக்கரைக்கு எழுந்தருளி சூரியோதயத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மூலஸ்தான பூஜையை தொடர்ந்து திருவூஞ்சல் இடம்பெறும். அதன்பின்னர் துவஜா அவரோகணம் என்று கூறப்படும் கொடியிறக்கம் இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து அம்பாள் வெள்ளைத் திருமேனியாக திருப்பூந்தண்டிகையில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தருள்வாள்.

மற்றும் ஏப்ரல் 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழா விமர்சையாக இடம்பெறவுள்ளது. அம்பாள் பூங்காவன பந்தலில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அவ்வேளையில் அம்பாளின் அருள் பெற அடியார்களை ஆலய பரிபாலன சபை அழைக்கின்றார்கள்.

7 News Pulse

Recent Posts

அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.  நாளைய தினமும் எதிர்வரும் 28ஆம்…

8 hours ago

காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 23 பேர் பலி

காசா – இஸ்ரேல் இடையேயான போர் ஒப்பந்தம் காலாவதியான நிலையில் காசா மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் போர் தாக்குதலை…

8 hours ago

சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால் விசாரணை – பொலிஸாரின் அறிவித்தல்

உந்துருளியில் பயணிக்காத ஒருவர் தலைக்கவசம் அணிந்திருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டால், அந்த நபரையும் அவரது உடமைகளையும் சோதனை செய்யுமாறு…

8 hours ago

கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவை இடைநிறுத்தம்

சிறி தலதா வழிபாட்டுக்காக கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை இன்று (24) முதல் மறு அறிவிப்பு…

8 hours ago

அமெரிக்காவுடனான தீர்வை வரி பேச்சுவார்த்தை வெற்றி

இலங்கை மீது அமெரிக்கா விதித்த ‘உயர் தீர்வை வரியை’ திருத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதால், இந்த விடயம் தொடர்பாக…

8 hours ago

நாட்டின் இன்றைய காலநிலை

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…

8 hours ago