இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது

ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவின் பெலிகஸ்வெல்ல பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி நபரொருவரை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4ஆம் திகதி மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதோடு, இது தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
அதற்கமைய, நேற்று (09) பிற்பகல் குறித்த சம்பவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் 46 வயதுடைய திக்கெலே, பெலிகஸ்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.