துருக்கிக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்.. நிறுத்தப்பட்ட அப்பிள் இறக்குமதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய பதட்டங்களுக்கு மத்தியில் துருக்கிக்கு எதிரான குரல்கள் எழுந்துள்ளன. ஆயுதங்கள் வழங்குவது உட்பட பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவான நிலைப்பாட்டுடன் செயல்படுவதால் ‘துருக்கியைத் தடை செய்’ என்ற ஹஷ்டேக் இணையத்தில் டிரண்ட் ஆகி வருகிறது.

இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த வியாபாரிகள் துருக்கி ஆப்பிள்களை இறக்குமதி செய்வதை கைவிட்டுள்ளனர். இதன் விளைவாக துருக்கிய ஆப்பிள்கள் புனே சந்தைகளில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.

துருக்கிய ஆப்பிள்களைப் புறக்கணிப்பது புனேவின் பழச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பொதுவாக, துருக்கிய ஆப்பிள்களின் பருவகால வர்த்தகம் ரூ.1,000 முதல் ரூ.1,200 கோடி வரை இருக்கும், ஆனால் இந்த புறக்கணிப்பு இந்த வர்த்தகத்தை கடுமையாக பாதிக்கும்.

புனேவின் வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (APMC) ஆப்பிள் வர்த்தகரான சுயோக் ஜெண்டே, “துருக்கியிலிருந்து ஆப்பிள்களை வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளோம், அதற்கு பதிலாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், ஈரான் மற்றும் பிற பகுதிகளிலிருந்து ஆப்பிள்களை வாங்க முடிவு செய்துள்ளோம்” என்று கூறினார்.

வணிகர்களுக்கு மட்டுமல்ல, நுகர்வோரும் இந்தப் புறக்கணிப்பில் தீவிரமாகப் பங்கேற்கின்றனர். துருக்கிய ஆப்பிள்களுக்கான தேவை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளதாக உள்ளூர் வியாபாரி ஒருவர் தெரிவித்தார். “நுகர்வோர் துருக்கிய தயாரிப்புகளைத் தீவிரமாகத் தவிர்த்து வருகின்றனர், சில்லறை விற்பனை மட்டத்தில் தடையை வலுப்படுத்துகின்றனர்” என்று அவர் மேலும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *