தெமோதரையில் மண்சரிவு அபாயம் ; 34 குடும்பங்கள் இடம்யெர்வு!

பதுளை மாவட்டத்தின் எல்ல – தெமோதரை பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் அங்கிருந்த 34 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக பதுளை மாவட்ட செயலாளர் ஸ்ரீ பிரஹாத் அபேவர்தன இன்று வியாழக்கிழமை (11) தெரிவித்துள்ளார்.

34 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேரே இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளனர்.

தெமோதரை பகுதியில் உள்ள மண்மேடுகள் 250 மீற்றர் அடி சற்று முன்னோக்கி சரிந்து காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் நேற்று புதன்கிழமை (10) தெரிவித்திருந்தது.

2 thoughts on “தெமோதரையில் மண்சரிவு அபாயம் ; 34 குடும்பங்கள் இடம்யெர்வு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *