அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
நீர் இன்றி அமையாது உலகு – இன்று சர்வதேச நீர் தினம்

ஆண்டுதோறும், மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச நீர் தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது
நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையைத் தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும்.
நாடுகளின் புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
2030 ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட ‘ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 6ஐ நோக்கியே, இந்த சர்வதேச நீர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
1992ஆம் ஆண்டு, ரியோ-டி-ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் போது முதன்முதலில், சர்வதேச நீர் தினம் பற்றிய யோசனை பரிந்துரைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு முதலே, மார்ச் 22ஆம் திகதியை சர்வதேச நீர் தினமாகக் கொண்டாடி வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் “பனிப்பாறை பாதுகாப்பு” என்பதாகும்.