நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி 

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் ஊடாக மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அத்துமீறி யானைவேலி அமைப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பெரும்பான்மையினத்தவர்களுக்கு வழங்கப்பட்ட காணிகளைப் பாதுகாப்பதாகக் கூறி, தமிழ் மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து இந்த வேலி அமைக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேற்று (16) நேரடியாகச் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். நில அபகரிப்பு நோக்கிலான இந்த அடாவடித்தனமான செயலுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

அத்துடன், சுமார் 2,000 ஏக்கர் நிலங்களுக்குப் பயன்படுத்தப்படும் கோட்டக்கேணி – எரிஞ்சகாடு விவசாயப் பாதை மிகவும் மோசமடைந்துள்ளது. அடுத்த ஆண்டு வீதி சீரமைக்கப்படவுள்ள நிலையில், தற்போதைய பெரும்போக அறுவடையைக் கொண்டுவர தற்காலிகச் சீரமைப்பு செய்து தருமாறு விவசாயிகள் விடுத்த கோரிக்கையையும் அவர் பரிசீலிப்பதாகத் தெரிவித்தார்.

2 thoughts on “நெற்செய்கையை ஊடறுத்து அடாவடியாக யானைவேலி அமைக்கும் மகாவலி 

  1. **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *