Categories: LocalWORLD

பங்கொக்கில் பாரிய நிலநடுக்கம்! இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பு.

தாய்லாந்தின் – பங்கொக் மற்றும் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட பாரி நிலநடுக்கங்களைத் தொடர்ந்து அந்த நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

இதன்படி, நிலவும் அவசர நிலையின் காரணமாக இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்பட்டால் அல்லது உதவி தேவைப்பட்டால், +66 812 498 011 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிகளில் பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதனை அடுத்து, அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான எவ்வித பாதக அறிவிப்பும் வெளிவரவில்லை என்று இலங்கைத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், பங்கொக்கில் உள்ள இலங்கைத் தூதரகம், தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.

இன்று(மார்ச் 28) நண்பகல் ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் இதுவரை 23 உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலரை இடிபாட்டுக்குள் சிக்கியிருக்கலாம் எனவும் சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. மேலும் மியான்மரில் 6 பிராந்தியங்களில் அவசரநிலை பிரகடனம்.

தாய்லாந்தின், பாங்கொக் நகர் மற்றும் மியான்மரில் இன்று(மார்ச் 28) நண்பகல் 12.50 மணியளவில் 7.7ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியது.

மேலும் வடக்கு மற்றும் மத்திய தாய்லாந்தின் தொலைதூரப் பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கட்டிடங்கள் மற்றும் வீதிகளும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதோடு. பாரிய கட்டிடங்களும் தரைமட்டமாகியுள்ளன.

இது தொடர்பான காட்சிகள் தற்போழுது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.

7 News Pulse

Recent Posts

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…

2 days ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…

2 days ago

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…

2 days ago

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…

2 days ago

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…

2 days ago

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…

2 days ago