பண்டிகை நாட்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

வரவிருக்கும் பண்டிகை நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதன்படி, மத சேவைகள் மற்றும் பண்டிகையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகள் நடைபெறும் கத்தோலிக்க தேவாலயங்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வழிபாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மதத் தலைவர்கள் மற்றும் நிகழ்வு ஏற்பாட்டாளர்களுடன் பொலிஸார் ஒருங்கிணைந்துள்ளனர். .

தகவல்களைச் சேகரிக்கவும் தேவைப்பட்டால் விரைவான நடவடிக்கை எடுக்கவும் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் பொலிஸார் நகர்ப்புற மையங்களில் சேவையில் ஈடுப்படுவார்கள். 

சந்தேகத்திற்கிடமான நபர்கள், குழுக்கள், வாகனங்கள் மற்றும் தனிப்பட்ட உடைமைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறும் அசாதாரணமான நிலையில் எதை கண்டாலும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்  பொலிஸார்  வலியுறுத்தியுள்ளனர். 

2 thoughts on “பண்டிகை நாட்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *