Categories: Local

பதுளை – இராவண எல்ல வனப்பகுதியில் காட்டுத் தீ, அதிகளவான நிலப்பரப்பு தீயில் நாசமாகின.

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராவண எல்ல வனப்பகுதியில் வெப்ரவரி 13ம் திகதி இரவு கட்டுத்தீ பரவியுள்ளது. இதனால் வனப்பகுதியில் உள்ள அதிகளவான நிலப்பரப்பு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இந்த காட்டுத்தியானது குறித்த வனப்பகுதியில் தனிநபரொருவர் அல்லது குழு ஒன்றினால் தீ வைக்கப்பட்டு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு கடினமாக இருந்ததாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் இ.எம்.எல். உதய குமார தெரிவித்தார்.

தற்பொழுது வறண்ட காலநிலை காணப்படுவதனால் எந்தவொரு தேவைக்காகவும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளில் தீ வைப்பதைத் தவிர்க்குமாறு வனப் பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய மலைநாட்டின் உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை இதுபோன்ற நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கும் என்று இயக்குநர் ஜெனரல் நிஷாந்த எதிரிசிங்க வலியுறுத்தினார்.

மேலும் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் பதுளை, கண்டி, நுவரெலியா, மாத்தளை, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 11 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்தத் தீ சம்பவத்திற்கு காரணமான நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிரிசிங்க கூறினார்.

7 News Pulse

Recent Posts

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…

1 day ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…

1 day ago

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…

1 day ago

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…

1 day ago

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…

1 day ago

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…

1 day ago