உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு 12 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வாவில் உள்ள பாதுகாப்பு முகாம் மீது குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுமார் 12 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் மேலும் 30 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தான் தாலிபான்களுடன் தொடர்புடைய ஜெய்ஷ் அல்-ஃபர்சான் என்ற குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.