உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி அட்டவணை அறிவிப்பு

10வது பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் ( PSL) போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த போட்டி ஏப்ரல் 11 முதல் மே 18 வரை நடைபெற உள்ளது.
6 அணிகள் விளையாடும் போட்டியில் 34 போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
முதல் போட்டி ஏப்ரல் 11 ஆம் திகதி நடப்பு சாம்பியனான இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் இரண்டு முறை பிஎஸ்எல் சாம்பியனான லாகூர் கிலாண்டர்ஸ் இடையே நடைபெறும்.
இந்த போட்டி நடைபெறும் காலத்திலேயே ஐபிஎல் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2025 IPL மார்ச் 22 முதல் மே 25 வரை நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது