உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
புதிய உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர்களில் அதிகபட்ச ஓட்டங்களை விளாசிய அணிகளின் வரிசையில் முதல் 3 இடங்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் தன்வசப்படுத்தியுள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குவித்த 287 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.
அத்துடன் நேற்றைய தினத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 286 ஓட்டங்களை விளாசியது.
இது ஐபிஎல் வரலாற்றில் பெறப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.
மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக குவித்த 277 ஓட்டங்கள் மூன்றாவது அதிகபட்ச ஓட்டங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உலக அளவில் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக முறை 250 ஓட்டங்களுக்கு மேல் அடித்த ஒரே அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி படைத்துள்ளது.