பேரிடரை தொடர்ந்தும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்

2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர்  மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 489,948 ஆகும். மேலும், ஜெர்மனியிலிருந்து 137,012 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 166,626 சுற்றுலாப் பயணிகளும்,  ஐக்கிய இராச்சியத்திலிருந்து 196,958 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 98,318 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 125,720 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 103,782 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்

அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களில் 70,023 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

One thought on “பேரிடரை தொடர்ந்தும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள்

  1. Hey, checking out Hbetvn.net. Hoping for a good experience here. Customer support better be responsive! Gonna give it a shot and see how it goes. Good luck to me (and you)! Check out Hbetvn: hbetvn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *