Categories: Local

மண்மேட்டில் சிக்கி உயிரிழந்த தொழிலாளி

பெல்மடுல்ல, புலத்வெல்கொட பகுதியில் நேற்று (08) மாலை மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் புட்டுஹபுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கட்டிடம் ஒன்றின் பின்புறத்தில் சுவர் ஒன்றை அமைப்பதற்காக வந்திருந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் மீதே இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்தவர் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த நபர் தற்போது கஹவத்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பெல்மடுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Doneproduction

Recent Posts

தபால்மூல வாக்களிப்பு – மூன்றாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது.   கடந்த 24 மற்றும் 25ஆம்…

16 hours ago

கோடிகளில் ஏலம் போன டைட்டானிக் கப்பல் கடிதம்

உலகப் புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் 1912-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் துறைமுகத்துக்குப்…

17 hours ago

இலங்கைக்கு வருகை தரும் ஐரோப்பிய ஒன்றிய குழு

ஐரோப்பிய ஒன்றிய GSP+ கண்காணிப்புக் குழுவொன்று இன்று (28) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. GSP+ வர்த்தக விருப்பத்தேர்வுகளை வழங்குவது தொடர்பான…

17 hours ago

பொலிஸாரால் அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட, வழக்கு விசாரணைகள் நிறைவுற்ற 494 கிலோ 48 கிராம் ஹெராயின்…

17 hours ago

இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகும் முன்னாள் ஜனாதிபதி

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (28) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று…

17 hours ago

கிராண்ட்பாஸ் பெண்ணின் கொலை- காரணம் வௌியானது

கடந்த 22ஆம் திகதி கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக, பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் அப்பெண்ணின்…

17 hours ago