Categories: WORLD

மனிதர்களை நெருங்கும் புதிய HKU5 கொரோனா வைரஸ்

வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது.

முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது.

இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது.

இது மனிதர்களுக்கு பரவும் வழியை திறக்கக் கூடியது. இந்த வைரஸ், MERS-CoV எனப்படும் முன்பு கண்டறியப்பட்ட கொடிய தொற்று வைரசுடன் தொடர்புடையது. குறிப்பிடத்தக்கவிதமாக, MERS நோயில் உயிரிழப்பு விகிதம் 34% ஆகும்.

HKU5 வைரஸ் முதலில் ஜப்பானிய வௌவால்களில் கண்டறியப்பட்டாலும், தற்போதைய கண்டுபிடிப்புகள், இது மின்க்ஸ் போன்ற இடைநிலை விலங்குகளுக்கு பரவி வருவதைக் காட்டுகின்றன. இதுவே மனிதர்களுக்குள் பரவ எளிதாக்கும் ஆரம்பமாக இருக்கலாம்.

WSU வைராலஜிஸ்ட் மைக்கேல் லெட்கோ, “இது இன்னும் மனிதர்களுக்கு நேரடியாக பரவவில்லை என்றாலும், அத்தகைய திறன் இருக்கிறது. எனவே கண்காணிப்பு அவசியம்,” என கூறுகிறார்.

ஆல்பாஃபோல்ட் 3 போன்ற AI கருவிகள், இந்த வைரஸ்களின் செல்களுடன் சேரும் விதத்தை ஆராய, கணிசமான உதவியாக உள்ளன. இவ்வாய்வு, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய தொற்றுக்களை தடுக்கும் முயற்சிக்கு முக்கிய அடித்தளமாக அமையும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

Doneproduction

Recent Posts

மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து விபத்து – 15 பேர் பலி

வடக்கு மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்களை தங்கள் வளாகத்திற்குத் திருப்பி அனுப்பிய பேருந்து ஒரு மினிவேன் மீது மோதியதில் 15 பேர்…

20 hours ago

இஸ்ரேலிய துறைமுகத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆர்வலர்கள் படகு

காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை கொண்டு செல்ல முயன்ற 12 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற ஒரு படகு இஸ்ரேலியப் படைகளால் கைப்பற்றப்பட்ட…

20 hours ago

பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 தானசாலைகள்

2025 பொசோன் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 19,185 பொசன் தானசாலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் மேலதிக…

20 hours ago

அக்சியம்-4 விண்வெளிப் பயணம் நாளை ஒத்திவைப்பு

அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து திட்டமிடப்பட்டிருந்த அக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் அக்சியம்-4 மனித விண்வெளிப்…

20 hours ago

இறந்து 8 நிமிடங்களில் மீண்டும் உயிர் பெற்ற பெண்

கொலராடோவைச் சேர்ந்த 33 வயது பிரியானா லாஃபர்டி, மயோக்ளோனஸ் டிஸ்டோனியா எனும் உயிருக்கு ஆபத்தான நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்டவர், சுமார்…

20 hours ago

இலங்கையில் முகக்கவசங்களின் விலை அதிகரிப்பு

இலங்கையில் முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய நெருக்கடியான…

20 hours ago