மருந்து தட்டுப்பாடு மத்தியில் இந்தியாவுடனான சுகாதார ஒப்பந்தம் ஆபத்தானது – ராஜித்த சேனாரத்ன

நாட்டில் இன்று பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவுடன் செய்துகொண்டுள்ள சுகாதாரம் தொடர்பான திருட்டு ஒப்பந்தம் நாட்டுக்கு பாரிய ஆபத்தாகும் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில்  400க்கும் அதிக மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் மயக்கமூட்டும் மருந்துகளுக்கும் வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது.அதேநேரம் சுகாதாரம் தொடர்பில் அரசாங்கம் இந்தியாவுடன் செய்துகொண்டு்ள்ள திருட்டு ஒப்பந்தம் மிகவும் பயங்கரமானதாகும். இந்த ஒப்பந்தத்தை நாங்கள் கண்டுபிடித்து வெளிப்படுத்தி இருக்கிறோம். இந்தியாவின் மருந்து பாமகோபியாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பிரித்தானிய, ஐராேப்பிய மற்றும் ஐக்கிய அமெரிக்க பாமகோபியாவையே நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.

ஏனெனில் இந்த நாடுகளின் தரம் குறைந்த மருந்து என ஒன்று இல்லை. அதனால் அச்சமின்றி எங்களுக்கு அந்த நாடுகளின் பாமகோபியாக்களில் இருந்து இறக்குமதி செய்ய முடியும். ஆனால் இந்திய பாமகோபியாவுடன் அவ்வாறு செய்ய முடியாது. இந்திய மருந்துகளில் நல்ல மருந்துகளும் இருக்கின்றன. தரம் குறைந்த மருந்துகளும் இருக்கின்றன. அதனாலே இந்திய பாமகோபியாவை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 

3 thoughts on “மருந்து தட்டுப்பாடு மத்தியில் இந்தியாவுடனான சுகாதார ஒப்பந்தம் ஆபத்தானது – ராஜித்த சேனாரத்ன

  1. **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *