மின்தூக்கியினுள் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பத்திரமாக மீட்ப்பு

இன்று(ஜூன் 28) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மின்தூக்கியொன்றில் சிக்கி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சமிந்திரானி கிரியெல்ல, சித்ரால் பெர்னாண்டோ, சதுர கலப்பத்தி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோரே இவ்வாறு மின்தூக்கியில் சிக்கிச் கொண்டுள்ளனர்.

கொழும்பில் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற பயிலரங்கு ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிச் செல்லும்போது மேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பண்டாரநாயக்க மாநாட்டு மண்டப ஊழியர்கள் வேகமாக சிரத்தையோடு செயற்பட்டு மேற்குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.

2 thoughts on “மின்தூக்கியினுள் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பத்திரமாக மீட்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *