உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
முதன்முறையாக படம்பிடிக்கப்பட்ட கடல் சாத்தான்

கருப்பு கடற்பறவை என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆழ்கடல் ராட்சத ஆங்லர்ஃபிஷ் சமீபத்தில் கேனரி தீவுகளில் உள்ள டெனெரிஃப் கடற்கரையில் ஒளி நிறைந்த நீல நீரில் அரிதாகத் தோன்றியிருக்கின்றது.
இந்தவகை கடல் சாத்தன் மீன்கள் பொதுவாக ஆழ்கடலில் வாழ்வதால் இதுவே அது படமாக்கப்படுவது முதல் முறையாகும்.அண்ணல் இந்த வகை மீன் ஏன் இவ்வளவு ஆழமற்ற நீர் பரப்புக்கு வந்ததென்பது தெரியவில்லையென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக பெண் ஆங்லர்ஃபிஷ்கள் தங்கள் தலையில் உள்ள “மீன்பிடி கம்பம்” போன்ற அமைப்பிற்க்காய் பெயர் பெற்றவை.