நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முதல் நாளில் சூரியின் மாமன் திரைப்படம் செய்துள்ள வசூல்
சம்மர் விடுமுறை ஸ்பெஷலாக தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புத்தம் புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வருகின்றன.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா லக்ஷ்மி அவருக்கு ஜோடியாக நடிக்க மாமன் திரைப்படம் வெளியாகி இருந்தது. அவர்களை தாண்டி ராஜ்கிரண், பாலா சரவணன், ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உறவுகளின் முக்கியத்துவத்தை பேசும் அதாவது தாய் மாமனின் பொறுப்புகளை சொலலம் இந்த படம் குடும்ப ரசிகர்களிடம் முதல் நாளே நல்ல ரீச் பெற்றுள்ளது.
படம் ரிலீஸ் ஆன நிலையில் இப்படம் ஜெயிக்க ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட விவாகாரம் குறித்து சூரி தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தார்.
தற்போது முதல் நாளில் மட்டுமே இப்படம் ரூ. 2.9 கோடி வரையிலான வசூல் வேட்டை நடத்தியுள்ளது.
குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ள மாமன் வரும் நாட்களில் நல்ல வசூல் வேட்டை செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

