நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
முன்னாள் SJB பிரதேச சபை உறுப்பினர் கைது
நேற்று (20) தெற்கு கடற்கரையில் கடற்படையினரால் போதைப்பொருள் கொண்ட மீன்பிடி படகு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
இது குறித்து விசாரித்தபோது, பன்னால பிரதேச சபையின் முன்னாள் சமகி ஜன பலவேகய உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்த்துள்ளனர்
இலங்கை கடற்படையினர் நேற்று (20) மதியம் தொடர்புடைய பல நாள் மீன்பிடிப் படகையும், அதில் இருந்த 6 மீனவர்களையும் தங்காலை மீன்வளத் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த தகவலின்படி, இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய கூட்டு நடவடிக்கையில் மீன்பிடிப் படகு கண்டுபிடிக்கப்பட்டது

