நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மூதூர் பகுதியில் வெள்ளத்தினால் செங்கல் சூளைகளும் பாதிப்பு!
மூதூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செங்கல் சூளை தொழிலாளர்களும் மீள தமது தொழில்களை செய்வதற்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மூதூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் காரணமாக செங்கல் சூளைகளில் இருந்த செங்கற்கள் மற்றும் மூலப்பொருட்கள் என்பன வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தமது தொழிலை மீள ஆரம்பிக்க அரசு தமக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.
மூதூர் பிரதேசத்தில் இருதயயுரம், ஷாபிநகர், ஜின்னாநகர், அம்மன்நகர், மணற்சேனை, நீலாப்பொல ஆகிய பகுதிகளில் செங்கல் சூளை தொழில் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறும் கட்டுமானங்களுக்குத் தேவையான செங்கற்களின் பெரும்பகுதி இப்பகுதிகளில் இருந்தே பூர்த்தி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


OK8BR, another one tailored for Brazil? Gotta love it! Always good to see platforms catering specifically to our market. I’ll be checking to see if they accept PIX payments – gotta be convenient, you know? See if they suit you: ok8br
Alright folks, thinking about giving 9999bet a whirl. Any advice or warnings before I jump in?