மெஸ்ஸியின் 70 அடி சிலை திறப்பு – நீண்டநேரம் காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லயோனல் மெஸ்ஸி 14 வருடங்களின் பின் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வருகை தந்துள்ளார்.

அதில் முதல்நாள் செயற்பாடுகளாக கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டுக் கழகம் சார்பில் உலகக் கிண்ணத்தை கையில் ஏந்தியவாறு மெஸ்ஸியின் 70 அடி உயர உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொளி மூலம் திறந்துவைத்த மெஸ்ஸி, அங்கிருந்து சோல்ட் லேக் விளையாட்டரங்கிற்கு சென்றார்.

அங்கு மெஸ்ஸிக்கு 78,000 ரசிகர்கள் ஆரவாரமாக கரகோஷம் எழுப்பி வரவேற்பளித்தனர்.

எனினும் அவரைச் சுற்றி பல அதிகாரிகள் இருந்ததால் ரசிகர்களால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. மேலும் அவர் அரங்கை சுற்றி வருவதாக முற்கூட்டியே ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்ததால் அவரை அருகில் பார்த்துவிடலாம் என்ற நம்பிக்கையில் பல மணி நேரமாக ரசிகர்கள் காத்திருந்தனர். அதேநேரம் அவரை பார்ப்பதற்காக இந்திய பணம் ரூ.5,000 முதல் ரூ.12,000 வரை டிக்கெட் எடுத்துக்கொண்டே ரசிகர்கள் மைதானத்துக்குள் வருகைத்திருந்தனர்.

ஆனால், மெஸ்ஸி மைதானத்தின் நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை உணர்ந்து இடைநடுவில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பி விட்டதால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

அதில் ஒருசிலர் மைதானத்தின் உடைமைகளை சேதம் செய்த காட்சிகள் நேற்று (13) முழுவதும் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில், இந்த சம்பவத்துக்கு மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பனர்ஜி மெஸ்ஸி மற்றும் அவரது ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்பட்டு தற்பொழுது இந்நிகழ்வின் பிரதான ஏற்பட்டாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இருப்பினும் மெஸ்ஸியின் ஏனைய செயற்பாடுகள் முன் கணிப்பிடப்பட்டதுபோல தொடர்ந்தும் இடம்பெற்றிருந்தன.

நேற்று (13) மாலை தெலுங்கானா முதலமைச்சர் மெஸ்ஸியை வரவேற்றதோடு கற்பாந்தடி மகிழ்ந்தனர். மேலும் ராகுல் காந்தி மெஸ்ஸியை சந்தித்து உரையாடியிருந்தார்.

2 thoughts on “மெஸ்ஸியின் 70 அடி சிலை திறப்பு – நீண்டநேரம் காத்திருந்த ரசிகர்கள் அதிருப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *