மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பதவி உயர்வு.!

மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக இரண்டு, மேல் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சபாநாயகர் “ஜகத் விக்ரமரத்ன” தலைமையிலான அரசியலமைப்பு பேரவை அண்மையில் கூடி, தலைமை நீதியரசர் “முர்து பெர்னாண்டோவின்” பரிந்துரையின் பேரில், ஜனாதிபதி “அநுர குமார திசாநாயக்க” சமர்ப்பித்த பரிந்துரைகளை அங்கீகரித்துள்ளது.

இதன்படி, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி “ஆதித்ய பட்டபெந்திகே” மற்றும் நீதிமன்ற சிவில் மேல்முறையீடுகள் நீதிமன்ற நீதிபதி “பிராங்க் குணரத்ன” ஆகியோரை மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக நியமிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் நீதியரசர் “முகமது தாஹிர் லஃபாரை” உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் முன்மொழிவை அரசியலமைப்பு பேரவை பரிசீலிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

உயர் நீதிமன்ற அமர்வில் தற்போது வெற்றிடம் இல்லை என்பதால், அவர் தொடர்பான வேட்புமனுவை அரசாங்கம் திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *