மொரோக்கோ – ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 22 பேர் உயிரிழப்பு

மொரோக்கோ நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றான ஃபெஸில் புதன்கிழமை (11) இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்துள்ளனர். 

இரண்டு கட்டிடங்களில் ஒரு கட்டிடம் வெறுமையாக இருந்ததாகவும், மற்றொரு கட்டிடத்தில் இஸ்லாமிய மரபில் குழந்தை பிறந்த மகிழ்ச்சியை கொண்டாடும் அகீகா (Aqiqah) சடங்கு நடத்தப் பெற்றதாக ஃபெஸ் நகரை சேர்ந்த சட்டதரணி தெரிவித்துள்ளார்.

கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில் எட்டு குடும்பங்கள் வசித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டதரணி மேலும் தெரிவித்துள்ளார்.

2 thoughts on “மொரோக்கோ – ஃபெஸ் நகரில் இரண்டு கட்டிடங்கள் இடிந்து விழுந்து 22 பேர் உயிரிழப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *