வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இது…
யாழ் – செம்மணி பகுதியில் விபத்து : இருவர் படுகாயம்…!

யாழ்ப்பாணம் – செம்மணி சந்தியில், மோட்டார் சைக்கிளுடன் பட்டா ரக வாகனம் மோதியதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே படுகாயமடைந்துள்ள நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.