Categories: WORLD

வடகொரியா சர்வதேச சட்டத்தை மீறியதாக தென்கொரியா குற்றச்சாட்டு

நேட்டோ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா 2022-ம் ஆண்டு போர் தொடுத்தது. 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ரஷியாவின் குர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் படைகள் நுழைந்தன. தொடர்ந்து நடைபெற்ற தாக்குதலில் குர்ஸ்க் பிராந்தியத்தை உக்ரைன் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

பின்னர் படைகள் மேற்கொண்டு உள்நுழைவதைத் தடுக்க ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர். இதில் ரஷியாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் சுமார் 15 ஆயிரம் வீரர்களை அங்கு அனுப்பியது.

ஆனால் உக்ரைன் தாக்குதலில் சுமார் 4 ஆயிரம் வீரர்கள் இறந்தனர். இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் மேலும் 3 ஆயிரம் வீரர்களை ரஷியாவுக்கு வடகொரியா அனுப்பியது.

இதனால் உக்ரைன் தாக்குதலை முறியடித்த ரஷியா குர்ஸ்க் பிராந்தியத்தை மீண்டும் கைப்பற்றியது. எனவே உக்ரைன் ராணுவத்தால் புதைத்து வைக்கப்பட்ட கண்ணிவெடியை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே குர்ஸ்க் பிராந்தியத்தைக் கைப்பற்ற உதவிய வடகொரியாவுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதின் கூறுகையில், குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்ட வடகொரிய வீரர்கள் ரஷியாவை தங்களது சொந்த தேசம் போல கருதி வீரத்துடன் போரிட்டனர். அவர்களில் பலர் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தனர். அத்தகைய வீரர்களுக்கு ரஷியா மிகவும் கடமைப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் சர்வதேச சட்டத்தை மீறி ரஷியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக வடகொரியா மீது தென்கொரியா குற்றம்சாட்டி உள்ளது. ரஷியாவுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியதாக உக்ரைன் முன்னரே குற்றம் சாட்டி இருந்தது. ஆனால் வடகொரியா தரப்பில் இதற்கு எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Doneproduction

Recent Posts

சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை

அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத்…

19 hours ago

சிவனொளிபாத மலைக்கு செல்லும் பாதைக்கு பூட்டு

அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நோர்டன் பிரிட்ஜில் இருந்து கினிகத்தேன, தியகல வழியாக ஸ்ரீபாத வரையிலான சாலை 10 நாட்களுக்கு…

19 hours ago

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனடியாக கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் அணு…

19 hours ago

ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ஈரான் சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது இந்த தாக்குதல்களுக்கு, மிகப் பெரிய விலையை கொடுக்க நேரிடும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்…

19 hours ago

வெப்பம் அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள அழிவு

பருவநிலை மாற்றத்தால் புவி வெப்பநிலை உயர்வு அன்டார்டிகா பனிப்பாறைகளை வேகமாக உருகச் செய்வதால் பென்குயின்கள் அழிந்து வருவதாக தெரியவந்துள்ளது. அன்டார்டிகாவின்…

19 hours ago

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ரஷ்யாவின் குறில் தீவுகளில் ஒரு வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் கடலில்…

19 hours ago