நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வீதி விபத்துக்களால் 2570 பேர் உயிரிழப்பு
இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை (9) பொலிஸ் ஊடகப் பிரிவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்துக் கொண்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடம் ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய அபாயகரமான 2427 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளன. அவ்வாறான விபத்துகளில் சிக்கி 2570 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு படுகாயம் ஏற்படக்கூடிய வகையில் 4821 விபத்துக்களும் பதிவாகியுள்ளன. அவ்வாறன விபத்துகளுக்கு ஆளான சுமார் 60 சதவீதமானோர் அங்கவீனர்களாகியுள்ளனர்.
கவனயீனம், அவதனம் இன்மை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்துதல் ஆகியன உங்கள் அன்புக்குரியவர்களின் உயிருக்கு பாதகமாக அமையலாம்.
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக தெரிவிப்பது அவசியம். 10 ஆயிரத்துக்கும் அண்ணளவான பொலிஸ் உத்தியோகத்தர்கள் போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சமூகப் பொறுப்பை உணர்ந்து சாரதிகள் வாகனம் செலுத்துவது அவசியம். கவனயீனமாக, மதுபோதையுடன் வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டில் நிலவிவரும் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு காலவதியாகியுள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களை மீள புதுப்பித்துக் கொள்வதற்கான பணிகளை முன்னெடுப்பதற்கு சாரதிகளுக்கு விசேட நிவாரணக் காலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25 ஆம் திகதியிலிருந்து இம்மாதம் 25 ஆம் திகதி வரையான ஒருமாத காலப்பகுதியில் சாரதிகள், தமது சாரதி அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்துக் கொள்ள வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றார்


Yo, what’s the deal with hi365bet? Are the odds any good? I’m looking for a new spot to place some bets and wanna make sure it’s worth my time. hi365bet