அனைத்து சிறைச்சாலை உயர் அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை விசாரணைகளைத் தொடங்கியுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல்வேறு தனிநபர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில், வங்கிக் கணக்குகள், வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களிலும் முழுமையான விசாரணை நடத்தப்படும். அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளும்…
வீர தீர சூரன் ஒரு வார அதிகாரபூர்வ வசூல்

விக்ரம் நடிப்பில் SU அருண் குமார் இயக்கத்தில் வீர தீர சூரன் படம் கடந்த வியாழன் அன்று ரிலீஸ் ஆகி இருந்தது.
நீதிமன்ற வழக்கு காரணமாக முதல் நாள் ரிலீசுக்கு தடங்கல் ஏற்பட்ட நிலையில் மாலையில் தான் முதல் காட்சியே திரையிடப்பட்டது.
இந்நிலையில் வீர தீர சூரன் ஒரு வாரத்தில் செய்திருக்கும் வசூலை தயாரிப்பாளர் அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்.
உலக அளவில் 52 கோடி ரூபாய் தற்போது வரை வசூல் வந்திருக்கிறதாம். இந்த வாரமும் பெரிதாக போட்டி இல்லை என்பதனால் இரண்டாம் வாரத்திலும் இந்த படம் நல்ல வசூல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.