பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட இருவர் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளனர். பிரதான நீதவான் அருணா இந்திரஜித் புத்ததாச அண்மையில் பிறப்பித்த உத்தரவிற்கமைய அவர்கள் மன்றில் முன்னிலையாகவுள்ளனர். 2023 ஆம் ஆண்டு வெலிகமவில் உள்ள விருந்தகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தேசபந்து தென்னகோன், கடந்த 10 ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அன்றையதினம் நீதிமன்ற உத்தரவுகளை மீறி நீதிமன்ற வளாகத்திற்குள் மகிழுந்தை ஓட்டிச்…
100 வயதில் தாயான கலபகோஸ் ஆமைகள்

அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியாவில் உள்ள 150 ஆண்டு பழமையான உயிரியல் பூங்காவில், அழிந்துவரும் நிலையில் உயிரினங்கள் பட்டியலில் உள்ள மேற்கு சாண்டா க்ரூஸ் கலபகோஸ் ஆமைகள் முதன்முறையாக குஞ்சு பொறித்துள்ளன.
நூறு வயதான பெற்றோருக்கு பிறந்த குஞ்சுகளுக்கு கீரை உணவுகளைக் கொடுத்து பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
உயிரியல் பூங்காவுக்கு தாய் ஆமை வந்ததன் 93-ஆவது ஆண்டு தினமான ஏப்ரல் 23-ஆம் தேதி, பொதுமக்கள் பார்வைக்கு குஞ்சுகள் வைக்கப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.